|
தேவையான பொருட்கள் :
இறால் : அரை கிலோ,பெரிய வெங்காயம் : 1 கப்,நறுக்கிய தக்காளி : 1 கப்
மஞ்சள் தூள் : அரை ஸ்பூன்,உப்பு : தேவையான அளவு,தேங்காய் பால் : அரை கப்
தாளிக்க :
சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு
அரைக்க :
இஞ்சி : 1/2
பூண்டு : 5
வத்தல் மிளகாய் : 5
கசகசா : கால் ஸ்பூன்
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி விழுது மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு இறால், அறை டம்லர் தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும். நன்கு சுருள கிண்டி அடுப்பை அணைத்து மல்லித் தலை தூவி இறக்கவும்.
Last update : 15-01-2009 20:33
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|