|
ரேணிகுண்டா படம் பாத்தியளா? இயக்குனர் பன்னீர் செல்வம் செமையா உழைச்சிருக்காரு. ஆனா இந்த படத்த பாத்துட்டு இன்னொரு படத்தோட இயக்குனர் தியேட்டர்லையே அழுதுட்டாராம். யாருனு கேக்கிறியளா? அதாங்க, "மாத்தி யோசி" படத்தோட இயக்குனர் நந்தா பெரியசாமி. ஏன்னா? ரேணிகுண்டா படமும் 'மாத்தி யோசி' படமும் ஒரே மாதிரியா இருக்காம். இதுல சென்னையிலிருந்து கைதியான நாலு பசங்க ரேணிகுண்டா போறாங்க, அதுல மதுரையிலிருந்து நாலு பசங்க சென்னை வர்றாங்க. பாவம் நந்தா பெரியசாமி "ஒரு கல்லுரியின் கதை" படத்துக்கு பிறகு நிறைய இடைவேளை விட்டு எடுத்திட்டு இருக்கிற படம். ஆனா ஒரு விஷயத்துல சந்தோஷமா இருக்காரு. படத்தோட "லவ்" ட்ராக் தப்பிசுதாம். இதுல "ஊமைபொண்ணு"இ அதுல "பேசுற பொண்ணு". இயக்குனர் அய்யா! கவலைய விடுங்க. இப்ப கோடம்பாக்கத்துல லைவா கதை சொன்னா தப்பிச்சிடலாம்.
- பரோட்டா மாஸ்டர்
Last update : 14-12-2009 13:38
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|