|
சிறிலங்காவின் 6வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சற்று முன்னர் அதாவது காலை 7மணிக்கு துவங்கியுள்ளது. இன்று பிற்பகல் 4மணிக்கு நிறைவடையும். இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 2008 ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி 14,088,500 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
மாவட்ட அடிப்படையில் வாக்காளர்களின் எண்ணிக்கையை பார்த்தால்
கொழும்பு மாவட்டத்தில் – 1521854 வாக்காளர்களும்,
கம்பஹா மாவட்டத்தில் – 1474464 வாக்காளர்களும்,
களுத்துறை மாவட்டத்தில் – 813233 வாக்காளர்களும்,
கண்டிமாவட்டத்தில் - 970456 வாக்காளர்களும்,
நுவரெலியா மாவட்டத்தில் – 457137 வாக்காளர்களும்,
மாத்தளை மாவட்டத்தில் - 342684 வாக்காளர்களும்,
யாழ். மாவட்டத்தில் – 721359 வாக்காளர்களும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் - 333644 வாக்காளர்களும்,
திருகோணமலை மாவட்டத்தில் – 241133 வாக்காளர்களும்,
அம்பாறை மாவட்டத்தில் – 420835 வாக்காளர்களும்,
கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னிதேர்தல் மாவட்டத்தில் – 266975 வாக்காளர்களும்,
புத்தளம் மாவட்டத்தில் – 495575 வாக்காளர்களும்,
குருநாகல் மாவட்டத்தில் – 1183643 வாக்காளர்களும்,
பதுளை மாவட்டத்தில் – 534814வாக்காளர்களும்,
மொனறாகலை மாவட்டத்தில் – 300642 வாக்காளர்களும் ,
இரத்தினபுரி மாவட்டத்தில் - 734651 வாக்காளர்களும்,
கேகாலை மாவட்டத்தில் – 613938 வாக்காளர்களும்,
அநுராதபுரம் மாவட்டத்தில் – 579261 வாக்காளர்களும்,
பொலநறுவை மாவட்டத்தில் - 280337 வாக்காளர்களும்,
காலி மாவட்டத்தில் – 761811 வாக்காளர்களும்,
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் – 421186 வாக்காளர்களும்,
மாத்தறை மாவட்டத்தில் – 578758 வாக்காளர்களும் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
சிறிலங்கா முழுவதிலும் 10,875 நிலையங்களில் வாக்களிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஏறக்குறை இரண்டரை இலட்சம் அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். சிறிலங்காவின் வரலாற்றில் அதிபர் தேர்தல் ஒன்றுக்காக அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தேர்தலாகவும் அதிகளவிலான வன்முறைகள் நிறைந்த தேர்தலாகவும் இது கணிக்கப்பட்டுள்ளது.
22 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன் தேர்தல் திகதி அறிவிக்ப்பட்ட காலம் தொட்டு நேற்றுவரையில் சுமார் 950 வரையிலான வன்முறைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளது உயிரிழப்புகளும் இதில் அடங்கும். வன்முறைகள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் சர்வதேச ரீதியிலும், உள்ளுரிலுமிருந்து தேர்தலை நீதியானதாகவும் நேர்மையானதாகவும் நடத்துமாறு வேண்டுகோள்கள் வந்துள்ளன.இருந்தபோதும் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் எனக்கூறப்படுகின்றது.
இரண்டு பிரதான வேட்பாளர்களான தற்போதைய அதிபர் மகிந்தவுக்கும் எதிரணிகளின் பொது வேட்பாளர் முன்னாள் சிறிலங்காவின் தரைப்படைத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கும் இடையிலேயே மிகக்கடுமையான போட்டி நிலவப்போகின்றது. மிகக்கடுமையான போட்டி இவ்விருவருக்குமடையே நிலவும் என்பதால் வெற்றி தோல்வி மிகக்குறைந்த வாக்குவித்தியாசத்திலேயே நிர்ணயிக்கப்படும்.
இன்று 11மணிக்கு பின்னர் முதலாவது தேர்தல் முடிவு வெளிவரலாம். முதலில் தபால் மூலமான வாக்களிப்பு விபரங்களே வெளிவரும்.தேர்தல் முவடிவுகள் தொகுதி ரீதியாக அறிவிக்கப்பட்டு பின்னர் மாவட்ட ரீதியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குள் அறிவிக்கப்படும். நாளை அதிகாலை அளவில் சிறிலங்காவின் அடுத்த அதிபர் யார் என்பதனை அறியக்கூடியதாக இருக்கும்.
நன்றி : மீனகம் Last update : 26-01-2010 08:11
|
|
|