ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதா அவதூறு வழக்கு. தன் மீது அவதூறு பரப்பிய காஞ்சி ஜெயேந்திரர் மீது நித்யானந்தாவுடன் உல்லாசமாக இருந்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ரஞ்சிதா அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக செக்ஸ் புகழ் நித்யானந்தா அண்மையில் நியமிக்கப்பட்டார். நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மதுரை ஆதீனமாக நித்யானந்தா மகுடம் சூட்டிக் கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதுபோன்ற செயல்கள் ஆன்மீகத்தை நிச்சயம் பாதிக்கும் என்றும் காஞ்சி ஜெயேந்திரர் அண்மையில் அதிரடியாக பேட்டி அளித்தார். அதோடு நடிகை ௦ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்யானந்தாவுடன் உள்ளார் என்றும் இதுவும் ஆன்மீகத்திற்கு எதிரானது என்றும் ஜெயேந்திரர் கூறினார். இதற்கு பதில் அளித்த நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவை நான் எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வதாக காஞ்சிப் பெரியவர் கூறி இருக்கிறார். ரஞ்சிதா என்னுடன் இல்லை. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருகிறார் என்று கூறுவது தவறு. மற்ற சீடர்களை போல் அவ்வப்போது வந்து செல்கிறார். அவர் தெரிவித்த கருத்துக்களை 10 நாட்களில் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று எச்சரித்திருந்தார். இந்த நிலையில் காஞ்சி ஜெயேந்திரர் தன் மீது அவதூறு கிளப்பியதாகத் தெரிவித்து நடிகை ரஞ்சிதா இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளேன். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளேன். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். ராகேஷ் ராமச்சந்திராமேனன் என்ற ராணுவ வீரரை திருமணம் செய்துள்ளேன். சமுதாயத்தில் நான் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறேன். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்று வரும் அவரது சீடராகவும் உள்ளேன். நித்யானந்தா சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த ஒரு பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்யானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.